83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி வட இந்திய தொழிலாளர்கள் தாக்கபட்டதாக சமுக வலைதள எதிரொலி தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி தலைமையில் விழிப்புணர்வு....

வட இந்திய தொழிலாளர்கள் தாக்கபட்டதாக சமுக வலைதள எதிரொலி தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி தலைமையில் விழிப்புணர்வு….

தூத்துக்குடி – மார்ச் -05,2023

Newz – webteam

தூத்துக்குடி கல்லாமொழி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணி பகுதிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. பல்வீர்சிங் இ.கா.ப ஆகியோர் நேரடியாகச் சென்று அங்குப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி குறித்தும் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4000 ற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேற்படி வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் அனல்மின் நிலைய கட்டுமான பகுதிக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் இ.கா.ப அவர்கள் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மேற்படி காவல் அதிகாரிகள் பேசுகையில், தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகிய எனது தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம், நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை, உங்கள் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் காவல்துறை உள்ளது, மேலும் உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு பணிபுரியுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் இ.கா.ப ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்