திருப்பத்தூர் – மார்ச் -06,2023
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மனு ரசீது பதித்து அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல்நடவடிக்கைக்காக அனுப்பியிருந்ததின் பேரில், மக்கள் சம்மந்தமாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் கடந்த (i) 2021-ல் 17,10,800/- மதிப்புள்ள 100 செல்போன்களும் (ii) 2022-ல் ரூபாய் 37,49,000/- மதிப்புள்ள 163 ரூபாய் செல்போன்கள் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதே போன்று கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலையத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பதியபட்ட வழக்குகளில் நடவடிக்கை மெற்கொண்டு தற்போது 170 செல்போன்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது அதன் மொத்த மதிப்பு ரூபாய் 40 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்
இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்பத்துார் அருகில் உள்ள நந்தினி மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மீட்கப்பட்ட 170 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக வழங்கினார்.
சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்மந்தமாக தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24மணிநேரமும் இயங்கும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் வாட்ஸ்ஆப் எண் 9442992526-ற்கு புகார்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.