83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்களுடன் மாவட்ட எஸ்பி ஆலோசனை.....

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்களுடன் மாவட்ட எஸ்பி ஆலோசனை…..

தூத்துக்குடி – மார்ச் -11,2023

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல்துறை சார்பாக வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிநகர் பகுதியிலுள்ள சந்திர மஹாலில் இன்று மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டுமென்றும், முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும் என்றும், மேலும் ஏ.டி.எம் இயந்திரங்கள் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும், கொள்ளையர்களின் முகம் தெளிவாக தெரியும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும், ரகசிய கேமராக்களையும் பொருத்தவேண்டும் என்றும், அனைத்து வங்கி ஏ.எடி.எம் மையங்களிலும் பாதுகாவலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி உட்;;கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி, மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்