நெல்லை – மார்ச் – 01,2023
Newz – webteam
நெல்லை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் நீர் மோர் வழங்கிய நெல்லை காவல் ஆணையாளர்
கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் வெப்பத்தை தாங்க கூடிய சோலார் தொப்பிகளை வழங்கியதோடு, நீர் மோர் வழங்கி போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். உடன் நெல்லை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் அவர்கள், காவல் உதவி ஆணையாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்