83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை தீரன் பட பாணியில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6,வது குற்‌‌‌றவாளி கைது கண்டெய்னர் பறிமுதல்....

தீரன் பட பாணியில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6,வது குற்‌‌‌றவாளி கைது கண்டெய்னர் பறிமுதல்….

திருவண்ணாமலை – மார்ச் -15,2023

Newz – webteam

திருவண்ணாமலை மாவட்டம் – ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளி கைது, கண்டெய்னர் பறிமுதல்.
கடந்த 12:02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய்.72,79,000/- பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர்.
தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப., உத்தரவுப்படி, வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி, இ.கா.ப. மேற்பார்வையில், காவல் கண்காணிப்பாளர்கள் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப. திருவண்ணாமலை மாவட்டம், S.ராஜேஷ் கண்ணன், .கா. வேலூர் மாவட்டம். Dr.K.S.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர். மாவட்டம் மற்றும் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப. ராணிப்பேட்டை மாவட்டம் ஆகியோர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தீவீர விசாரணையில் இச்சம்பவத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 5,00,000/- பணத்தையும், இரண்டு கார்களையும் கைப்பற்றிய நிலையில் இன்று 14.03.2023 தேதி இவ்வழக்கில் தொடர்புடைய சிராஜுதின் வ/50 த/பெ சிரதரா, ஜவாந்தி குர்த் கிராமம், திஜாரா வட்டம், ஆல்வார் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் என்பவரை கர்நாடகா மாநில எல்லையருகே தனிப்படையினர் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்