83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்பி நடவடிக்‌‌‌கையால்‌‌‌ சைபர்‌‌‌ குற்‌‌‌றவாளிகளுக்‌‌‌கு இனி அல்‌‌‌வாதான்‌‌‌.....

தூத்துக்குடி எஸ்பி நடவடிக்‌‌‌கையால்‌‌‌ சைபர்‌‌‌ குற்‌‌‌றவாளிகளுக்‌‌‌கு இனி அல்‌‌‌வாதான்‌‌‌…..

தூத்துக்குடி – பிப் -01,2023

Newz – webteam

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக “மூன்றாம் கண்” மற்றும் “அல்வா” என்ற விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பொறுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட “மூன்றாம் கண்” என்ற குறும்படத்தையும், சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “அல்வா” என்ற குறும்படத்தையும் நேற்று மாலை தூத்துக்குடி ராஜ் மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இடையூறாக இருப்பது அறியாமை, ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டு அதன் பின் அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்தால் அவர்கள் நிச்சயமாக எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டார்கள், எனவே குற்ற செயலில் ஈடுபட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பகள் என்ன என்பதை பொதுமக்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும், வாழ்க்கையில் நான் பெரியவர், நீ பெரியவர் என்று போட்டி போடுவதை விட அவர்களிடம் அன்புடனும் சகோதரத்துவத்துடனும் பழகி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போய் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதனால் தேவையற்ற சண்டை, சச்சரவுகளை தவிர்த்து நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி முன்னேற முடியும். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் பொது மக்களிடையே “மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவரும் ஜாதி மத பேதம் இன்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் இருக்க வேண்டி தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

மேலும் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா மூலம் நடந்த குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கவும், சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளில் குற்றங்கள் நடவாமல் தடுக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். அதன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மூன்றாம் கண் குறும்படம் அமைந்துள்ளது என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்க தலைவர் திரு. சாம்ராஜ் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தர்மராஜ், பிரான்சிஸ், இம்ரான்கான் மற்றும் செங்குட்டுவன் ஆகியோரும் பங்கேற்றனர்.

தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் . மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்