81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் கத்தி காட்டி மிரட்டி சொல்போன் பறிப்‌‌‌பில்‌‌‌ ஈடுபட்‌‌‌ட கும்பல் அதிரடி கைது.....

தூத்துக்குடியில் கத்தி காட்டி மிரட்டி சொல்போன் பறிப்‌‌‌பில்‌‌‌ ஈடுபட்‌‌‌ட கும்பல் அதிரடி கைது…..

தூத்துக்குடி – பிப் – 01,2023

Newz – webteam

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது – 750 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 19,000/- பணம் பறிமுதல்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (31.01.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ரோச் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த தொம்மை மகன் வெலிங்டன் (33), தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் ஸ்டாலின் (23) மற்றும் தூத்துக்குடி வாடி தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (23) என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரிகளான வெலிங்டன், ஸ்டாலின் மற்றும் உதயமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 19,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி வெலிங்டன் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், தருவைகுளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என 8 வழக்குகளும், எதிரி ஸ்டாலின் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், மற்றொரு எதிரி உதயமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கம் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்