தூத்துக்குடி – பிப் – 01,2023
Newz – webteam
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது – 750 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 19,000/- பணம் பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (31.01.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ரோச் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த தொம்மை மகன் வெலிங்டன் (33), தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் ஸ்டாலின் (23) மற்றும் தூத்துக்குடி வாடி தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (23) என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான வெலிங்டன், ஸ்டாலின் மற்றும் உதயமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 19,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி வெலிங்டன் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், தருவைகுளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என 8 வழக்குகளும், எதிரி ஸ்டாலின் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், மற்றொரு எதிரி உதயமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கம் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.