சென்னை – பிப் -16,2023
Newz – webteam
புழல் மத்திய சிறை -1 இல் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் (Heavy duty industrial power laundry) பயன்பாட்டிற்கு வந்தது.
சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொண்டிருந்த போது சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாததால் இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மகளிர் சிறைகளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 எண்கள் கொள்முதல் செய்து சிறைகளில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்நிகழ்விற்கு தலைமையேற்ற சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி இ.கா. ப.தண்டனை சிறைவாசியான பிரேம்குமார் என்பவரை தொடங்கி வைத்திட கூறியதன் பேரில் சிறைவாசி ரிப்பன் வெட்டியதுடன் சலவை இயந்திரத்தை தொட்டு இயக்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஆ.முருகேசன், மத்திய சிறை கண்காணிப்பாளர்
கள் நிகிலா நாகேந்திரேன்
கிருஷ்ணராஜ், சிறை அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.