83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் மதுரை மதுரையில் சோலார் மூலம் இயங்கும் அதிநவீன சோதனை சாவடியை மாவட்ட எஸ்பி இன்று திறந்து வைத்தார்

மதுரையில் சோலார் மூலம் இயங்கும் அதிநவீன சோதனை சாவடியை மாவட்ட எஸ்பி இன்று திறந்து வைத்தார்

மதுரை – பிப் -08,2023

Newz – webteam

மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேனி நெடுஞ்சாலையில் சோலார் மூலம் இயங்கும் அதிநவீன சோதனைச் சாவடியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இ.கா.ப திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் மதுரை நகர் எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளை புறநகரோடு இணைக்கிறது. இந்த காவல் நிலைய எல்லையை ஒட்டிய முக்கிய சாலையாக மதுரை தேசிய நெடுஞ்சாலைஉள்ளது. அண்டை மாநிலமான கேரளாவை மதுரை நகரோடு இணைக்கும் மிக முக்கியசாலையாகும்.

இந்த சாலையில் அச்சம்பத்துக்கு அருகில் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் முக்கிய இடத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் முயற்சியில் 100 சதவீத சோலார் வசதியுடன் இயங்கக்கூடிய புதிய நவீன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

இந்தச் சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் நேற்று மாலை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் , நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து மணி சார்பு ஆய்வாளர்கள் வேல்பாண்டி, கணேஷ் குமார், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்