81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி...

தூத்துக்குடி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி பரிசு வழங்கி பாராட்டு…

தூத்துக்குடி – பிப் -18,2023

Newz – webteam

தூத்துக்குடி புனித அந்தோணி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற நடனம், யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு மச்சாதுநகர் பகுதியில் உள்ள புனித அந்தோணி மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களுக்கிடையேயான நடனம், யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இந்த பள்ளியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பலர் வெற்றி பெற்றிருப்பீர்கள், சிலருக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம், அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டதே பெரிய வெற்றியாக கருத வேண்டும், இதுபோன்ற நடனம், யோகா, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் சின்ன சின்ன ஊக்கங்கள் மாணவர்களாகிய உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும், மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் வெற்றியாளராக இருக்க வேண்டும், அதேபோன்று மாணவர்களாகிய நீங்கள் எந்த விஷயத்தில் சாதிக்க நினைக்கிறீர்களோ அதில் கவனம் செலுத்தினால் உங்கள் லட்சியத்தை அடைய முடியும் என்று கூறி தனது சிறப்புரை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் . பாலதண்டாயுதபாணி, புனித அந்தோணி பள்ளி தாளாளர் அனிதா ஜோசப் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாலமுருகன், ஷேக் மைதீன், காந்தி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்