திருநெல்வேலி – பிப் -12,2023
Newz – webteam
பள்ளி மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்கல்வி அலுவலர்களிடம் கருத்துக்களை கேட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு…..
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022-ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணபத்தாரர்ளுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு 06.02.2023-ம் தேதி நடைபெற்று 11.02.2022- ம் தேதி நிறைவு பெற்றது. கடந்த 6 நாட்கள் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் 1159 ஆண்களில் 866 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேற்படி உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல் துறையினருக்கு உறுதுணையாக பணியாற்றிய உடற்கல்வி அலுவலர்கள் தினமும் உடற்திறன் தேர்வு முடிந்த பின்பு, பள்ளி மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உள்ள வழிமுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடற்கல்வி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது உடற்கல்வி அலுவலர்கள் கூறுகையில் தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளமான Facebook, Instagram, WhatsApp மற்றும் Online Game போன்றவற்றிற்கு அடிமையாகி வருவதால் தங்களது சிறு வயதிலேயே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். மேலும் உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அதிலிருந்து மாணவர்கள் மீட்கும் வகையில் கிராமங்களில் முக்கிய இடங்களில் மாணவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு மைதானம்,கைபந்து மைதானம், சிறகு பந்தாட்ட ரிங், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் சிறு உடற்பயிற்சி கூடங்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில் மாணவர்கள் செல்போனிற்கு அடிமையாவதில் இருந்து மீண்டு ஆர்வமுடன் தினமும் விளையாண்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வார்கள். அவ்வாறு விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காவல்துறை மற்றும் இராணுவம் போன்ற அரசு துறைகளில் பணியில் சேர விளையாட்டு மிக முக்கிய பங்கு வகுக்கிறது என்பதை தெரிவித்தனர்.