83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை திருவண்ணாமலை வங்கி ஏடிஎம்‌‌‌ கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் கைது 5,எஸ்பிக்கள் தனி...

திருவண்ணாமலை வங்கி ஏடிஎம்‌‌‌ கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் கைது 5,எஸ்பிக்கள் தனி படைகளுடன் வெளி மாநிலம் சென்று அசத்தல் …..

திருவண்ணாமலை – பிப் -17,2023

Newz – webteam

பத்திரிக்கை செய்தி 17.02.2023
திருவண்ணாமலை – ஏடிஎம் கொள்ளைக்கும்பல் தலைவன் கைது
பணம், வாகனம் பறிமுதல்.
கடந்த 12.02-2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம்! மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய்:72,79,000/- பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர். தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப., மேற்பார்வையில், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி, இ.கா.ப., தலைமையில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தீவிர விசாரணையில் இச்சம்பவத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இக்கொள்ளையில் 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.செபாஸ்கல்யாண், இ.கா.ப. ஆந்திர மாநிலத்திற்கும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஷ்கண்ணன் இ.கா.ப குஜராத் மாநிலத்திற்கும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப ஹரியானா மாநிலத்திற்கும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.S.பாலகிருஷ்ணன், கர்நாடகா மாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் விரைந்தனர். இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண்ஸ்ருதி, இ.கா.ப. தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்கண்ட குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். மேற்படி குற்றவாளிகள் திருடிச்சென்ற பணத்திலிருந்து ரூபாய். 3,00,000/- பணத்தையும், குற்றாவாளிகள் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி குற்றவாளிகளுடன் தனிப்படையினர் டெல்லியிலிருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்துகொண்டிருக்கின்றனர். பிற குற்றவாளிகளையும் கைது செய்ய பல்வேறு பகுதிகளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முகமது ஆரிப் வயது 35
த/பெ முகமது இலியாஸ் ஹரியானா மாநிலம்.
சோனாரி கிராமம், நூ மாவட்டம்
ஆஜாத் வயது 37
த/பெ ஷருப்கான, பைமாகேரா கிராமம்,
புன்ஹானா மாவட்டம். ஹரியானா மாநிலம்,

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்