திருநெல்வேலி – பிப் -24,2023
Newz – webteam
பால் வியாபாரம் செய்து 5 செண்ட் நிலம் வாங்கிய நபரை, போலி ஆவணம் மூலம் ஏமாற்றிய நபரிடமிருந்து நிலத்தை மீட்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.
ருநெல்வேலி மாவட்டம், K.T.C நகரை சேர்ந்த ஜெயலெட்சுமி என்பவர் மும்பையில் பால் வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து சேமித்து வைத்த பணத்தில் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி,ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். கொரானா காலத்தில் மும்பையில் வருமானம் இல்லாத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்பிய ஜெயலெட்சுமி அவர்கள் மேற்படி நிலத்தை பார்வையிட்ட போது இடம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. மேற்படி நிலத்தை மீட்பது அறியாமல் தடுமாறிய ஜெயலெட்சுமி அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிந்தவர்கள் கூறியதன் பேரில் ஜெயலெட்சுமி, மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீராள்பானு அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் சாவித்ரி, தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., நில உரிமையாளர் ஜெயலெட்சுமி, அவர்களிடம் இன்று 24.02.2023 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.