83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 3,பேர் அதிரடி கைது....

தூத்துக்குடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 3,பேர் அதிரடி கைது….

தூத்துக்குடி – பிப் -09,2023

Newz – webteam

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது – ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (08.02.2023) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சத்யா நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் தலைமையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், பயிற்சி உதவி ஆய்வாளர் செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர் செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22), தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) மற்றும் முத்தையாபுரம் கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மேற்படி எதிரிகளான தங்ககுமார், கார்த்திக் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி தங்ககுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு என 9 வழக்குகளும், எதிரி கார்த்திக் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் திருட்டு உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 14 வழக்குகளும், எதிரி சக்திவேல் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்