தூத்துக்குடி – ஜன -31,2023
Newz – webteam
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு கடந்த 27.11.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு வருகின்ற அன்று 06.02.2023 முதல் 11.02.2023 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.