திருநெல்வேலி – ஜன -10,2023
Newz – webteam
32 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த செந்தில்வேல் என்பவருடைய தந்தைக்கு கங்கைகொண்டான்,பைபாஸ் பகுதியில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 32 செண்ட் நிலம் உள்ளது. செந்தில்வேல் தந்தை வேலு அவர்கள் இறந்துவிட்டதால் மேற்படி நிலத்தை பாக பிரிவினைக்காக வில்லங்கச் சான்று எடுத்துப் பார்த்துள்ளனர், அப்போது மேற்படி இடம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்து. மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு செந்தில்வேல் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. மீராள்பானு அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் தனலெட்சுமி அவர்கள் தலைமையிலான தலைமைகாவலர் நாகராஜன், காவலர் .அய்யாதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ப.சரவணன் இ.கா.ப., நில உரிமையாளர் செந்தில்வேல் அவர்களிடம் இன்று 09.01.2023 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நில உரிமையாளர்கள் நிலத்தை தொடர்ந்து நேரில் சென்று பார்வையிடுவது மட்டுமல்லாமல் தங்களது நிலத்தை அவ்வப்போது வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மற்றும் தமிழ் நிலம் என்ற செயலியை தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு பட்டா பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.