கோயம்புத்தூர் – ஜன – 27,2023
Newz – webteam
வழிபறியில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு…
பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் தடாகம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் வசந்த்குமார் PC 1316 மற்றும் கார்த்திக் PC 1606 ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்தார் அந்நபர் காவலர்களை பார்த்தவுடன் மிதிவண்டி கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளார். அப்போது காவலர்கள் அந்நபரை விரட்டி பிடித்து விசாரணை செய்தபோது செல்போனை திருடிவிட்டு தப்பிக்க முயற்சிசெய்ததும், இதற்கு முன்பு தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதும், பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய தேனி மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் விஜயகுமார் என்பதும் தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.60,000 மதிப்புள்ள 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேற்படி சம்பவத்தின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை விரட்டிப் பிடித்த காவலர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.