தூத்துக்குடி – டிச -15,2022
Newz – webteam
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நேற்றைய ரோந்தை தொடர்ந்து இன்றும் நேரடியாக தீவிர ரோந்து.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து சிறப்பு ரோந்து மேற்கொண்டார். அதனைதொடர்ந்து இன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங்போர்டு உட்பட பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தடுப்பது குறித்து பொதுமக்கள் தகவல் தருவதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் அறிமுகபடுத்தப்பட்டுள்ள 83000 14567 என்ற செல்போன் எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த சிறப்பு ரோந்தின்போது சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர், தாளமுத்துநகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.