திருநெல்வேலி – டிச -27,2022
Newz – webteam
32 சென்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு சுப்பையா திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் 28.11.2022 -ம் தேதி மனு அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் . மீராள்பானு மற்றும் உதவி ஆய்வாளர் தனலெட்சுமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., நில உரிமையாளர் சுப்பையாவிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 1 இலட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலத்தினை மனு அளித்து ஒரு மாதத்திற்குள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.