தூத்துக்குடி – டிச – 20,2022
Newz – webteam
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மேரிகலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டு.
தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ் (CCTNS) என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.
மேற்படி இந்த இணையதள பயன்பாடு குறித்து புதுடில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சி.சி.டி.என்.எஸ் இயக்குபவரான சிறப்பு உதவி ஆய்வாளர் மேரிகலா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கடந்த 15.12.2022 அன்று புதுடில்லியில் வைத்து தேசிய குற்ற ஆவண காப்பகம் விருது வழங்கியது.
மேற்படி தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மேரிகலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா இ.கா.ப, மாவட்ட சி.சி.டி.என்.எஸ் உதவி ஆய்வாளர் . விக்டோரியா அற்புதராணி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.