நெல்லை மாநகரம் – டிச -27,2022
Newz – webteam
நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினரின் தன்னார்வ ரத்ததான முகாமை துவக்கி வைத்து குருதி தானம் வழங்கிய காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற தன்னார்வ ரத்ததான முகாமை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப துவக்கி வைத்து குருதி கொடை வழங்கினார். உடன் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் , நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் .நாகசங்கர் , மாநகர குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆணையாளர் .சரவணன் , நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சுமார் 100 பேர் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் G.S.அனிதா கலந்து கொண்டார். மேலும் ரத்த தானம் வழங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்