திருநெல்வேலி – டிச -21,2022
Newz – webteam
சுமார் 30 இலட்சம் மதிப்புள்ள 121 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ஆந்திரா வரை சென்று தகவல் சேகரித்து எதிரிகளை கைது செய்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.
தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் கஞ்சா வேட்டை 3.0- வினை செயல்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டுளளார்.
உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் உட்கோட்டத்தில் உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்யும் எதிரிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் .பல்பீர்சிங், இ.கா.ப., அவர்கள், தலைமையில் அமைக்கப்பட்ட உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் சிறப்பாக செயல்பாட்டின் மூலம் கடந்த 15.12.2022-ம் தேதி ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு வாகனத்தில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மற்றும் எதிரிகளை பிடித்தனர். இதுவே மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட அதிகப்படியான கஞ்சாவாகும்.மேலும் அம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த 18.12.2022-ம் தேதி காரின் டயருக்குள் மறைத்து வந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேற்படி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் இகா.ப., தலைமையில் சிறப்பாக பணிபுரிந்த, காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், பெருமாள், உதவி ஆய்வாளர்கள் முருகேஷ், வாசுதேவன், இளையராஜா (பயிற்சி) சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமை காவலர்கள் முரளி, .ஆறுமுகம், முதல்நிலைக் காவலர்கள் ராஜேஷ்,கார்த்திக் பாபு, இசக்கி ராஜா, இசக்கி பாண்டி, மகாராஜன், திவான் ஷா ஷேக் பரீத் மற்றும் இரண்டாம் நிலை காவலர் முகமதுபஷீர் ஆகிய உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி ஊக்குவித்தார். மேலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.