நெல்லை – ஆகஸ்ட் 04,2022
நெல்லை மாநகரம் பேட்டை பகுதிகளில் கஞ்சா, போதை பொருள் விற்பனை மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான, பேட்டை சத்யா நகரை சேர்ந்த ராமையா மகன் தங்கராஜ் (44) என்பவர் மீது கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை வழக்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரியை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சரவணகுமார் , டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார், மற்றும் பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் , ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் படி ,பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் , மேற்படி நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை இன்று , பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.