நெல்லை மாநகரம் – மே-23,2022
நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சசிக்குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக தச்சநல்லூர் மார்க்கெட்டில் 24-04-2022 ம் தேதியன்று, கொலை செய்த வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்த, திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அழகுபாண்டியன் மகன் பாலமுருகன் (29) என்பவர் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சுரேஷ்குமார் , சந்திப்பு சரக காவல் உதவி ஆணையாளர் அண்ணாதுரை , மற்றும் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் , ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் இ.கா.ப உத்தரவின் படி, தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் .வனசுந்தர் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை இன்று , பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.