கன்னியாகுமரி – டிச -10,2021
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS தலைமையில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்கலந்துகொண்டு மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மனித உரிமைகள் தினம் உறுதிமொழி:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும்,இந்தியாவில் செயல்படுத்தத்தக்க, பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும். நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.