தர்மபுரி – டிச -08,2021
மாணவர்கள் அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகள் மற்றும் பணம் இழப்பு குறித்தும் சைபர் க்ரைம் குற்றவாளிகள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் எவ்வாறு மிரட்டி பணம் பறிக்கின்றனர் இச்செயல்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும். குழந்தைகள் பாதுகாப்பு உதவி 1098 , மகளிர் பாதுகாப்பு உதவி எண் 181 பற்றி விவரி அவசர காலத்தில் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாணவிகள் தங்களது பிரச்சினைகளை மனம் திறந்து பேசவேண்டும் மற்றும் உரிமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சமீப காலமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவ , மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழிப்பது அதிகமாக உள்ளது ஆனால் இணையத்தில் இருக்கும் ஆபத்து உணராமல் விழிப்புணர்வு இன்றி வரும் மாணவிகளுக்கு சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டாம் என்றும் பெண்கள் முகம் தெரியாத நபரிடம் ஆன்லைனில் பழகுவதை தவிர்க்க வேண்டும் அதேபோல் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்ப்பது நல்லது இணைய குற்றவாளிகள் போட்டோக்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் எனவே மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் போது மனம் தளராமல் தைரியமாக காவல் துறையை அணுகவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பத்தினார். மேலும் விழிப்புணர்வு குறும்படம் மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.