சென்னை – நவ – 15,2021
கோவை தனியார் பள்ளியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கபட்ட 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் மாதர்சங்கங்கள் என அனைவரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.பாலியல் துன்புறுத்தலால் மாணவி தூக்கி்ட்டு இறந்துள்ள சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர் மிதுன் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆகியோரை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுப்பதற்கும் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் அரசியல் கட்சிகளும் மாதர் சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்நிலையில் போலீஸ் மீடியா சார்பில் கோவை மாணவி தற்கொலை சம்பவம் குறித்து சமுக ஆர்வலர் ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம்.
சமுக ஆர்வலர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு :
திருநெல்வேலி மாநகரத்தில் துணை கமிஷனராக சரவணன் ஒராண்டிற்கும் மேலாக பணிபுரிந்துவந்தார் அவர் பொதுமக்கள் பயனபெறும் வகையில் பல நல்ல திட்டங்களை நடைமுறைபடுத்தினார் அதனால் முதல்வர் குட்புக்கில் இடம் பிடிதஂதார் மக்களை புது விதமாக அனுகியதற்காக ஸ்காட்ச் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று நெல்லைக்கு பெருமை சேர்த்தார். இதுபோன்ற மாணவிகள் பாதுகாப்பு குறித்து அவர் செய்த நடவடிக்கைகள் உங்களுக்கு சொல்கிறேன் அதுபோன்ற நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் ஏன் கிராமங்களிலும் கூட செயல்படுத்தினால் பெண் குழந்தைகளுக்கான எதிரான பாலியல் சீண்டல்கள் தடுக்கப்படும் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுத்து விடலாம் . தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலி அறிமுகப்படுத்தப்பட்ட போது நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக சரவணன் இருந்த நிலையில் காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து மாணவ மாணவிகளுக்கு் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆண்கள் பெண்கள் இணைந்து படிக்கும் கல்லூரிகளிலும் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் பெண்கள் அதிகமாக பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்திலும் காவலன் SOS செயலி எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது அதனுடைய முக்கிய அம்சம் என்ன எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எந்த சூழலில் அதை பயன்படுத்த வேண்டும் என்பதனை செயல் விளக்கமளிதஂதாரஂ ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இருவருக்கும் தனித்தனியாக எதெல்லாம் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிலிருந்து நம்மை எப்படி தவிர்த்துக் கொள்ளுதல் என்பதைப்பற்றிய கருத்தரங்கம் நடத்தி அறிவுரைகள் வழங்கினார் நெல்லை மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற விழிப்புணர்வை நிகழ்சிகளை நடத்தினார் மாணவர்களுக்கும் காவல்துறைக்கு உள்ள தொடர்பு இந்த நிகழ்ச்சியுடன் நின்றுவிடகூடாது என்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் போதெல்லாம் மாணவ மாணவிகளுக்கு ஹெல்மெட் , சாலைவிதிகள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் நல்ல கருத்துக்கள் அடங்கிய கட்டுரை போட்டிகள் ஓவிய போட்டிகள் குறித்தும் மாணவர்களுக்கு மாணவிகளுக்கு உண்டான எண்ண ஓட்டத்தை அறியக்கூடிய வகையில் டியர் டிசி என்ற திட்டத்தின் கீழ் கடிதம் எழுதி அவருக்கு அனுப்பச் சொல்வார் அனுப்பிய கடிதங்கள் அனைத்தையும் அவரே வாசிப்பார் அதில் சிறந்த கருத்துடைய மாணவர்களுக்கு கமிஷனர் அலுவலகத்தில் வரவழைத்து பாராட்டு விழா நடத்தி பரிசுகளையும் வழங்குவார் இவ்வாறு அனைத்து பள்ளிகளுக்கும் டியர் டிசி என்கிற திட்டம் அனைத்து தரப்பு மாணவர்கள் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேறப்பை பெற்றது மேலும் அவரை ஒரு சிறந்த காவல்துறை அதிகாரியாகவும் காட்டியது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் இது போன்று 30,க்கும் மேற்பட்ட நிகழ்சிகளை நடத்தியுள்ளார் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவதால் ஏதோ சில பள்ளிகளில் மாணவிகளிடத்தில் மாணவர்களோ அல்லது ஆசிரியரோ தவறாக நடக்கும் எண்ணம் இருந்தாலும் மாணவிகள் அனைவரும் காவல்துறை அதிகாரியோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்ற நிலை வரும் பொழுது தவறு செய்யக்கூடியவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும் மேலும் அவ்வாறு ஏதாவது சிறிய தவறுகள் நடந்தால் கூட காவல்துறை உயரதிகாரிகளிடத்தில் நேரடியாகவும் சுலபமாகவும் சொல்லிவிடலாம் என்ற என்னத்தை மாணவ மாணவிகளுக்கு உருவாக்கும் இது போன்ற நடவடிக்கையால் பள்ளி மாணவிகளுக்கு எந்தவிதமான பாலியல் சீண்டலுக்கு உள்ளாகாமல் மாணவிகள் படித்து வருவார்கள் இதுபோன்று மாணவ சமூகத்திற்கும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடிய காவல்துறை அதிகாரிகளுக்கு்ம்
இயல்பான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் அவசியமாக இருக்கிறது அது அந்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் அதோடு மட்டுமல்லாமல் தவறு செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் இனி அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் இதை ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக திருநெல்வேலியில் துணை கமிஷனராக பணிபுரிந்த சரவணன் மிக சிறப்பாக செய்திருந்தார் இது அனைத்து மாவட்டங்களிலும் செய்யபட வேண்டும் சம்பிரதாயமாக நின்றுவிடாமல் இதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்