திண்டுக்கல் – நவ -23,2021
களவு போன மற்றும் காணாமல் போன ரூ.8,64,000 மதிப்புள்ள 70 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலைங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மேற்பார்வையின் கீழ் சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்களை IMEI எண்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் சுமார் ரூ.8,64,000 மதிப்புள்ள 70 ஆன்ட்ராய்டு வகை செல்போன்களை மீட்டு இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்