தூத்துக்குடி – நவ -23,2021
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பார் to சூரங்குடி சாலையில் வாகன தணிக்கை செய்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 65 B 4585 என்ற Tata sumo காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் மேற்படி வாகனத்தை நிறுத்தியபோது வாகன ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். மேற்படி வாகனத்தையும், 35 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.