திருச்சி – அக் – 03,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
இன்று காலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரிய மற்றும் தற்காப்பு வீர விளையாட்டுக் கலையான சிலம்பக் கலையை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டத்தின் முன்னோடி சிலம்ப ஆசான்கள் ஜெயக்குமார் மற்றும் பரணிதரன் ஆகியோர் தலைமையில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், IPS மற்றும் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த், IFS முன்னிலையில் நுற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்ட பல்வேறு வகையான சிலம்ப வித்தைகளை வெளிக் கொணரும் பாரம்பரியக் கலை விழா நடத்தப்பட்டது.
2) இவ்விழாவில் பாரம்பரிய சிலம்பக் கலைகளான கம்பு சுற்றுதல், கள்ளன் கம்பு, சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம், நெடுங்கம்பு சுற்றுதல், நடுக்கம்பு சுற்றுதல், சிலா வீச்சு, .பொடிகுச்சி, செடிகுச்சி, சிலுவை போத்து ஆகிய சிலம்ப விளையாட்டுக் கலைகள் பாரம்பரிய விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளால் செய்து காட்டப்பட்டது. விழாவின் சிறப்பு அம்சமாக காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் அவர்கள் சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம் மற்றும் கம்பு சுற்றுதல் வித்தைகளை செய்து காட்டினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் அவர்களும் சிலம்பக் கம்பு கற்றும் கலையை செய்து காட்டினார். தமிழர்களின் தற்காப்பு பாரம்பரிய கலையின் பெருமையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சிலம்பக் கலை வித்தையினை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரியக் கலை விழா நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்பட்டன. விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நேரு யுவகேந்திரா மையத்தின் மூலம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.