83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சர்தார்வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்பி கொடியசைத்து தொடங்கிவைத்தார்

சர்தார்வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்பி கொடியசைத்து தொடங்கிவைத்தார்

தூத்துக்குடி – அக் –31,2021

சர்தார் வல்லபாய் பட்டேலின்‌‌‌ 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் நாட்டு மக்களின் ஒற்றுமையை (Run for Unity) வலியுறுத்தி நடைபெற்ற மாணவ, மாணவியருக்கா மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு.

சர்தார் வல்லபாய் பட்டேலின்‌‌‌ 146வது பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில், அக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் சுமார் 100 மாணவர்கள் தூத்துக்குடி மறவன்மடம் பேரூந்து நிறுத்தத்திலிருந்தும், 100 மாணவிகள் கோரம்பள்ளம் பேரூந்து நிறுத்தத்திலிருந்தும் இன்று (31.10.2021) காலை 06.30 மணிக்கு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை ஆரம்பித்து, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நிறைவு செய்தனர். இவ்விரண்டு இடங்களிலும் இந்த ஓட்டப்பந்தயத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நிறைவடைந்ததையடுத்து மாணவ, மாணவிகள் சார்பில் முதல் இடத்தை பிடித்த 3 மாணவர்களுக்கும், 3 மாணவிகளுக்கும் தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றி பரிசு வழங்கினார்

இவ்விழாவிற்கு மீன் வளக்கல்லூரி டீன் டாக்டர் சுஐத்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அக்கல்லூரி விளையாட்டு செயலாளர் திரு. பார்த்திபன், உடற்பயிற்சி இயக்குனர் திரு. நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர். மேலும் இப்பரிசு விழாவில் மீன் வளக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும்; கலந்து கொண்டனர்.

இந்த மினி மாரத்தான் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், தலைமைக் காவலர் சாமிக்கண்ணு உட்பட போக்குவரத்துப்பிரிவு மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்