தேனி – அக் – 16,2021
சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் பிரிவு மற்றும் உட்கோட்ட கிரைம் காவல்துறையினருக்கு பொதுமக்களிடம் குவியும் பாராட்டு
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் பாக்கியம் தலைமையிலான சைபர்கிரைம் பிரிவு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 125 காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து மீட்டனர்.
இன்று தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் காணாமல் போன செல்போன்களின் உரிமையாளர்களை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
செல்போன்களை பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர்கள் தேனி மாவட்ட காவல்துறைக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு விரைந்து கண்டுபிடித்து மீட்ட தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட கிரைம் காவல்துறையினரின் பணி சிறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் காணாமல் போன செல்போனை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.