திருச்சி – அக் – 21,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
திருச்சி மத்திய மண்டலம், காவல்துறை தலைவர் அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் பணி புரியும் பெண் காவலர்கள் தங்கள் திறமை மற்றும் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவும், காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதர்க்கான பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சியை முடித்த 51 பெண் காவலர்களுக்கு (திருச்சி – 3, கரூர் – 12, பெரம்பலூர் – 3, அரியலூர் – 13, திருவாரூர் – 15, நாகபட்டினம் – 5) ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தரப்பட்டதுடன் இன்று அழைத்து பாராட்டி ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார், மேலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வாகனத்தில் அமர வைத்து ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண் காவலர்கள் வானத்தை இயக்கிக்காட்டி பாராட்டுகளை பெற்றனர் .
மேலும் தற்சமயம் பயிற்சியில் 53 (திருச்சி-7, புதுக்கோட்டை-10, கரூர் – 9, பெரம்பலூர் – 7, அரியலூர் – 8, தஞ்சாவூர் – 15, நாகபட்டினம் – 2) பெண் காவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று வருகின்றனர்.