கோயம்புத்தூர் – அக் – 18,2021
கோவை மாவட்டத்தில் இன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த துடியலூர் காவல் ஆய்வாளர். ஞானசேகரன், துடியலூர் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் , நிலைய பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்த சூலூர் காவல் நிலைய எழுத்தர் சந்துரு, சிறந்த முறையில் CCTNS-ல் கோப்புகளை பதிவேற்றம் செய்த கருமத்தம்பட்டி காவல் நிலைய முதல்நிலை பெண்காவலர் . சந்திரலேகா, சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து திறம்பட செயல்பட்ட பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் நவநீதன் ஆகியோர்களுக்கு
சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் சிறந்த காவல் நிலையமாக துடியலூர் காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை துடியலூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் மற்றும் சிறந்த உட்கோட்டமாக பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தை தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையினை உட்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் அவர்களுக்கும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் வழங்கி
கௌரவப்படுத்தினார். ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்பட செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.