கோயம்புத்தூர் – அக் – 19,2021
20 வருடங்களில் முதல் முறையாக தமிழ்நாடு பாராலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் வென்ற கோவை வெற்றி வீராங்கனைகள்
நமது கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில்* தமிழ்நாடு பாராலிம்பிக் கைப்பந்து சங்கத்தின் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான 9-வது தமிழ்நாடு பாராலிம்பிக் கைப்பந்து விளையாட்டு போட்டியில் நமது கோவை மாவட்டத்தை சேர்ந்த கோயமுத்தூர் மாவட்ட அனைத்துவகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மகளிர் அணி ” கோவை குயின்ஸ் ” முதல் பரிசை வென்று நமது கோவை மண்ணிற்கு பெருமை சேர்த்தனர். இவ்வெற்றியை அவ் வீராங்கனைகள் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் பகிர்ந்து நல்வாழ்த்துக்கள் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வெற்றிக் கோப்பையுடன் இன்று கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., நேரில் சந்தித்து அவர்களது வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட காவல் துறை சார்பாக பாராட்டுகளையும், மேலும் இதுபோன்ற வெற்றிகள் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.