ஈரோடு – அக் – 11,2021
ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொடுமுடி காவல் நிலையத்தில், இன்று கோவை சரக துணைத்தலைவர் முத்துசாமி, இ.கா.ப.ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், இ.கா.ப., மற்றும் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப, ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின போது காவல் நிலையத்தில் பாரமரிக்கப்பட்டு வரும் ஆவனங்கள் மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து, ஆவணங்களை முறையாக பாரணிக்கவும், கண்டுபிடிக்காத வழக்குகளை கண்டுபிடிக்குமாறும், நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இரவு ரோந்துகளை முறையாக செய்து குற்றங்களை தடுக்குமாறும், மனு வீசாரணையை செம்மையாக செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும், ரோந்தின் போதும் பொதுமக்களிடம் தன்மையான முறையில் நடந்து கொள்ளவேண்டும் என்றும், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிவகிரி காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் என்பதை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.