திருநெல்வேலி – அக் – 29,2021
ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகள் வழங்கி சிறப்புரையாற்றிய மாநகர காவல் துணை ஆணையாளர்
நெல்லை மாநகரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவியருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் அலங்கார் சினிமாஸ் மற்றும் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாகதாய் தந்தையரை இழந்து தவிக்கும் ஏழை மாணவ மாணவியரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் விதத்தில் மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டார் மாணவ,மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை அடைந்து, இது போன்று சமூகத்திற்கு பல உதவிகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்துசுப்ரமணியன் லயன்ஸ் சங்க முதலாம் நிலை துணை ஆளுநர் விஸ்வநாதன் தலைவர் சங்கர வேலு , அலங்கார் சினிமாஸ் நடத்துனர் லயன் மணிகண்டன் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்