81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "சென்னை - தொடர்திருட்டில்‌‌‌ ஈடுபட்ட கும்பல் கைது - அண்ணாநகர் போலீசாருக்கு போலீஸ்கமிஷனர் பாராட்டு...

“சென்னை – தொடர்திருட்டில்‌‌‌ ஈடுபட்ட கும்பல் கைது – அண்ணாநகர் போலீசாருக்கு போலீஸ்கமிஷனர் பாராட்டு…

சென்னை – அக் -08,2021

அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை,அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெரிய அளவிலான கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன்பு நிறுத்தியிருந்த கார்களின் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனதாக எ அண்ணாநகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் மற்றும் திருமங்கலம் காவல் நிலையத்தில் 1 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாநகர் உதவி ஆணையாளர் அகஸ்டின் பால்சுதாகர் தலைமையில்,அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பன்னீர்செல்வம், தலைமைக் காவலர்கள் ஜெயமணி சரவணன் குமரன் மற்றும் காவலர் முகமது சலாவுதீன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடங்களின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த 1) டீனு அகமது (வ/25), 2) தீனதயாளன் (வ/22), 3) ரோகன்தேவ் (வ/24), 4) ராஜாராம் (வ/29), 5) கிரண்குமார் (வ/24), 6) தினேஷ்குமார் (வ/25), 7) சுப்ரமணி (வ/48) ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறாரை பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 லேப்டாப்கள் மற்றும் பணம் ரூ.1,16,000/- கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்