தென்காசி – அக்-02,2021
தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த (17/07/2021) அன்று கோவில்பட்டியை சேர்ந்த சொர்ணவடிவு என்பவர் தனக்கு சொந்தமான இடம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் உள்ளதாகவும் தனது இடத்தை தனது பெரியப்பா மகன் கணேசன் என்பவர் போலி ஆவணங்கள் கொண்டு அவருடையது என உரிமை கொண்டாடுவதாகவும் தனது இடத்தை மீட்டு கொடுக்குமாறும் கொடுத்த புகாரின் பெயரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் (DCB) தலைமையில் காவல் ஆய்வாளர் சந்தி செல்வி (ALGSC) விசாரணை மேற்கொண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு சொர்ணவடிவின் உடன்பிறந்த சகோதரன் கணேசன் என்பவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் மீட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.