94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை வங்கி பெயரை கூறி மோசடி செய்த இருவர் கைது -மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர்...

வங்கி பெயரை கூறி மோசடி செய்த இருவர் கைது -மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை- செப் -07,2021

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 நபர்களை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை செல்போனில் அழைத்த நபர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், உங்களது கிரெடிட் கார்டுக்கு பரிசுகள் கிடைத்திருப்பதாகவும், கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்த பரிசு பொருளை பெற்றுக் கொள்ளுமாறு விவரங்கள் மற்றும் OTP எண்ணை பெற்று அவரது கிரெடிட் கார்டிலிருந்து ரூ.1,08,740/- பணம் எடுத்து மோசடி செய்துள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து கோவிந்தராஜ் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர்‌‌‌ தேன்மொழி, இ.கா.ப., அறிவுரையின்பேரில், துணை ஆணையாளர் நாகஜோதி ஆலோசனையின்பேரில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பிரபாகரன் தலைமையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமைக் காவலர்கள் ஜெகநாத், ஸ்டாலின், கோமதி, சுபஜாராணி ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி மோசடி கும்பலைச் சேர்ந்த 1.அதுல்குமார் டெல்லி, 2) குணால், காசியாபாத் ஆகியோரை டெல்லியில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீதுநீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்