94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தேனி 20,லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் - இரண்டு பேர் கைது- தேனியில் பரபரப்பு

20,லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் – இரண்டு பேர் கைது- தேனியில் பரபரப்பு

தேனி – செப் – 06,2021

20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்.! இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல்துறையினர். இராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனைமலையன்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் கும்பல் சுற்றி திரிவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி உத்தரவின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி ,இராயப்பன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாயன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஆனைமலையன்பட்டி வெள்ளைக்கரடு பகுதியில் சந்தேகப்படும்படியான இரண்டு நபர்கள் பையுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் பதில் அளித்ததை தொடர்ந்து, பின் அவர்களிடமிருந்த பைகளை சோதனை செய்த போது அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்து, அவர்களிடமிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து இரண்டு நபர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து, வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த இராயப்பன்பட்டி காவல் நிலைய காவல் துறையினரின் பணி சிறக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்