திருநெல்வேலி – செப்-04,2021
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் (மூன்றாவது அலை) தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து, நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினருடன் இணைந்து அறிவுரைகள் வழங்கிய நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்
நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீரும் கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு அமுக்கரா சூரணமும் கொடுக்கப்பட்டது. இதில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் Dr.திருத்தணி, Dr.சுபாஸ் சந்திரன் (State Medical officer), Dr.சிவரஞ்சனி, (மத்திய அலுவலகத்தின் ஆராய்ச்சி அலுவலர்) கலந்துகொண்டு உரையாற்றினர், நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் சித்த மருத்துவத்தின் பலன்களையும் அடுத்துவரக்கூடிய கொரோனா வைரஸ் (மூன்றாவது அலை) தாக்கினால் அதிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்வது பற்றியும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கபசுர குடிநீர், மருந்து பொருட்களை வழங்கினார்கள். உடன் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு , ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து , உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 150 பேர் பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்