சென்னை – செப் -10,2021
சென்னை பூந்தமல்லி டூ திருவொற்றியூர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது, எதிர்பாரா விதமாக, ஏழுமலை மயக்க நிலைக்குப் போனார். அந்த நிலையிலும் விபத்து நிகழ்ந்து விடாமல், பேருந்தை பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார்; ஏழுமலை
அதேநேரத்தில், அந்தப் பகுதி ரோந்துக் காவலில் இருந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் யாஹியா; நிஜ நாயகனாக களத்தில் இறங்கியுள்ளார்.
போலீஸ் பேட்ரோல் ஜீப்பில், ஓட்டுநர் ஏழுமலையை ஏற்றிக் கொண்டு; சைரனை ஒலிக்க விட்டு, அரசு கே.எம்.சி., மருத்துவமனைக்கு நிமிடத்தில் விரைந்துள்ளார்.
”இனி ஆபத்து ஏதும் இல்லை,
குறித்த நேரத்தில்; கொண்டுவந்து
சேர்த்து விட்டீர்கள் என்று
மருத்துவர்கள், மகிழ்ச்சி தெரிவிக்க;
பெருமூச்சு விட்டிருக்கிறார்; யாஹியா.
கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை, யாஹியா சரியாய்ப் பயன்படுத்தியதால் ஓட்டுநர் ஏழுமலை, மறுவாழ்வு பெற்றிருக்கிறார்.