94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து மாவட்ட எஸ்.பி தலைமையில் இந்து அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து மாவட்ட எஸ்.பி தலைமையில் இந்து அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி – செப் – 05,2021

வருகின்ற 10.9.2021ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால் கொரோனா தற்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை இன்று அனைத்து இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப விளக்கி கூறியுள்ளார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் தற்போது கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது எனவும்,இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது வழிபடுவதுஅனுமதிமறுக்கப்பட்டுள்ளதைஎடுத்துரைத்துள்ளார்.

10.09.2021 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு எந்த ஒரு ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை உருவளமாக கொண்டு சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

10.09.2021 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தனிப்பட்டமுறையில் அவரவர் தங்களது வீட்டிற்குள் நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

மேலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்படியும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா இ.கா‌.ப, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், ஆகியோரும் தாழையூத்து, அம்பாசமுத்திரம், வி.கே.புரம், வள்ளியூர், நாங்குநேரி சேரன்மகாதேவி மற்றும் களக்காடு போன்ற இடங்களைச் சேர்ந்த அனைத்து இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்