94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி நேர்மைமிகு நபருக்கு மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு

நேர்மைமிகு நபருக்கு மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – செப் – 07,2021

கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து மனிதநேயத்துடன் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவருக்கு சால்வை அணிவித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அத்திமரப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி சரசு என்பவர் கடந்த 30.08.2021 அன்று எட்டையாபுரம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையத்தில் வைத்து தனது மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளார். அதில் ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இரு சக்கர வாகனத்தின் ஆர்.சி. புக் ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் பணம் ரூபாய் 9,500/-மும் வைத்திருந்துள்ளார். அப்போது பழைய பேரூந்து நிலையம் வந்த தூத்துக்குடி அழகேசபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செய்யது அலி மகன் சொய்பு (35) என்பவர் மேற்படி மணிப்பர்ஸ் கீழே கிடப்பதை பார்த்து, அதை எடுத்து மனித நேயத்துடன் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் அறிவுரையின்படி உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அதில் உள்ள ஆவணங்களை வைத்து, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதன் உரிமையாளரான சரசு என்பவரிடம் ஒப்படைத்தார்.

மேற்படி மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளவர் மறுபடியும் இந்த ஆவணங்களை சேகரிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மனித நேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி சொய்பு என்பவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சொய்பு நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்