94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி புதிய புறக்காவல்நிலையத்தை மாவட்ட எஸ்.பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

புதிய புறக்காவல்நிலையத்தை மாவட்ட எஸ்.பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தூத்துக்குடி -செப் – 17,2021

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்‌‌‌று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், செட்டிக்குறிச்சி பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காவல்துறை சார்பாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையம் செட்டிக்குறிச்சி மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில் காவல்துறையினர் 24 மணி நேரமும் இருப்பார்கள். செட்டிகுறிச்சி பொதுமக்கள் தங்களது புகார்களை கயத்தாறு காவல் நிலையம் சென்று கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த புறக்காவல் நிலையத்திலேயே தங்களது குறைகளை தீர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இந்த வசதியை செட்டிகுறிச்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்களுக்கு பணி செய்யவே காவல்துறை உள்ளது.

மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலிப், பால் உட்பட காவல்துறையினர் மற்றும் செட்டிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்