94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை 90,ஆயிரம்‌‌‌ அடங்கிய தலையனையை மீட்ட போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

90,ஆயிரம்‌‌‌ அடங்கிய தலையனையை மீட்ட போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – செப் – 04,2021

எண்ணூர் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, மணிலிபுதுநகர் பகுதியில் டெல்லியைச் சேர்ந்த முகமது வசீம் (எ) பப்பு (வ/35), என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த அவரது அம்மா சந்தாபீ (பெ/55) என்பவரை வழியனுப்பி வைப்பதற்காக கடந்த 30.08.2021 அன்று மாலை முகமது வசீம் (எ) பப்பு தனது மனைவி மற்றும் தாய் சாந்தபீயுடன் ஒரு ஆட்டோவில் ஏறி விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர். பிறகு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் ரயிலில் தனது தாய் சந்தாபீ (55) என்பவரை ஏற்றி விட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சாந்தாபீ இரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் ரூ.90 ஆயிரம் பணத்துடன் அடங்கிய தலையணையை தேடியுள்ளார். பணத்துடன் கூடிய தலையணை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்த சாந்தபீ உடனே அவரது மகன் முகமது வசீம் (எ) பப்புவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

முகமது வசீம் (எ) பப்பு மேற்படி சம்பவம் குறித்து எண்ணூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து எண்ணூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜி, முதல் நிலைக்காவலர் வேலுசாமி, மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் தாமோதரன் ஆகிய மூவரும் மணலிபுதுநகர் ஆண்டாள் குப்பம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலிருந்து தலையணையை யார் வைத்தது என்பது தெரியாமல் ஆண்டாள் குப்பம் பகுதியில் உள்ள குப்பையில் வீசி சென்றதாக தெரிவித்துள்ளார். உடனே மேற்படி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் கூறிய இடத்தில் தேடி ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணையை கண்டுபிடித்து சாந்தபீயின் மகன் முகமது வசீம் (எ) பப்புவிடம் பத்திரமாக ஓப்படைத்தனர்.

பயணி ஆட்டோவில் தவறவிட்ட ரூ.90 ஆயிரம் அடங்கிய தலையணையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்