கன்னியாகுமரி – செப் -09,2021
விநாயகர் சதுர்த்தி சிலை வைத்தல் தொடர்பான அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டம், விநாயகர் சதுர்த்தி சிலை வைத்தல் தொடர்பான அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS விளக்கினார்.
அதன்படி தனி நபர்கள் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். ஆனால் பொது இடங்களில் வைக்க அனுமதியில்லை.
விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்வதற்க்கு தடை.
விநாயகர் சிலை கரைக்க தனி நபராக அருகே இருக்கும் நீர் நிலைகளில் கரைக்கலாம்.
மேலும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும், அரசு மற்றும் நீதி மன்றத்தின் உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.