திருச்சி – செப் -26,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப., மேலான உத்தரவின்பேரில், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, மேற்கொண்டு கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை 11.30 மணியளவில், திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் மணல்மேடு அருகில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த இரண்டு நபர்களான 1) தட்சினாமூர்த்தி, வயது 20/21, த/பெ. முருகன், எமர்.33-சி, 5-வது பிரகாரம், மணல்மேடு, திருவானைக்கோவில், திருச்சி மற்றும் 2) சுரேஷ், வயது 33/21, த/பெ.கணேசன், வடக்கு 5-வது பிரகாரம், மணல்மேடு, திருவானைக்கோவில், திருச்சி என்றும், அவர்களை சோதனை செய்ததில் வெட்டுவாள்-1 மற்றும் அருவாள்-1 ஆகியவற்றை வைத்திருந்தவர்களை தனிப்படையினர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இரண்டு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், கடந்த 26.10.2020-ஆம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்மேடு, மேல விபூதி பிரகாரம், திருவானைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் நடந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய கு.எண். 886/2020 ச/பி 147, 148, 342, 294(பி), 307, 302 இதச-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் புலன்விசாரணையில் மேற்படி வழக்கின் சட்டப்பிரிவுகள் 120(8) IPC, 3(i)(r), 3(i)(s), 3(i)(v) of SC/ST Act-ன்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை, இறந்துபோன முருகன், த/பெ.வடிவேல் என்பவரின் மகள் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து மேற்படி வழக்கின் குற்றவாளிகளை பழிதீர்க்கும் நோக்கத்தோடு அவர்களை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தனர். பின்னர், அதன் உண்மைதன்மை கண்டறியப்பட்டு மேற்படி எதிரிகள் தட்சிணாமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலைய கு.எனர். 795/2021 u/s 25(1)(a) and 27 of Indian Arms Act, 1959-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காவல் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பழிக்குபழி வாங்கும் நிகழ்வாக நடைபெற இருந்த கொலை சம்பவம் உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது. கொலை சம்பவத்தை தடுத்து அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்
இனிவருங்காலங்களில் இதுபோன்று பழிவாங்கும் எண்ணத்துடன் சட்டத்திற்கு புறம்பாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.