94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு

மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – செப் – 07,2021

பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட எதிரிகள், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், லோன் வாங்கி தருவதாகவும் கூறியதை நம்பிய, கனகலட்சுமி ரூ.82,000/- பணத்தை எதிரிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் லோன் பெற்று தராததால், ஏமாற்றமடைந்த கனகலட்சுமி சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்ததின்பேரில், மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் பி.சி.தேன்மொழி, இ.கா.ப., அறிவுரையின்பேரில், துணை ஆணையாளர் ஜி.நாகஜோதி ஆலோசனையின்பேரில், கூடுதல் துணை ஆணையாளர் ஆர்.பாண்டியன் நேரடி கண்காணிப்பில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பிரபாகரன் தலைமையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் அசோக்தாமஸ்துரை, பிரேம்குமார், தலைமைக் காவலர்கள் ஜெகநாத் விஜயா, சாந்தி, முதல்நிலைக் காவலர் சாஹிலா, காவலர்கள் மோகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த 1) அசோக்குமார், 2)காமாட்சி, 3) ராஜ்வேல் மற்றும் 4) அபிஷேக்பால் ஆகிய 4 நபர்களை கைது செய்து, ரூ.8 லட்சம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்